Show all

இராசராசசோழன் மீதான வழக்கு என்னுடையதல்ல! சமூக சீர்திருத்தவாதிகள் என்போரின் கருத்தையே முன் வைத்தேன்: பா.இரஞ்சித்

இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவரது ஆட்சிகாலம் இருண்ட காலம் என்று பேசியிருந்த இயக்குநர் இரஞ்சித். இது தன்னுடைய நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்று முன்பிணை மனுவில் விளக்கமளித்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பல்லாயிரம் ஆண்டு கால தமிழக வரலாற்றில், தமிழ் மண்ணுக்கு அப்பாற்பட்டும் தன் நிருவாக, வல்லாதிக்கத் திறனால் பெயர் விளங்கிய முதல் இரண்டு மாவீரர்கள் என்று சொன்னால், ஒருவர் மாமன்னன் இராசராச சோழன்; மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். மாமன்னன் இராசராச சோழனுக்கும், மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கும் உள்ளும் வெளியும் எழுந்த பகைகள் ஏராளம்.

தமிழர்கள் அல்லாத இனத்தில், நிறைய வல்லாதிக்க திறமையுள்ளவர்களைப் பட்டியல் இடுவார்கள் உலகினர். ஆனால் அவர்கள் யாருமே நம்முடைய இந்த இரு மாவீரர்களுக்கு இணையாக முடியாது. ஏனென்றால் உலகிலேயே இந்த இருவர் மட்டுமே எதிரிகளாலும் மாமனிதர்கள் என்று போற்றப் படுகிற மாண்புக்கு உரியவர்கள்.

ஆனால் இந்த இருவரையுமே கூட பார்ப்பனியர்களும், பார்ப்பனியத்தில் ஊறிப்போனவர்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பார்க்கிறார்கள்.

பிரபாகரன் மீது வைக்கப் பட்டுள்ள குற்றம்: இராஜிவ் கொலை. இராசராச சோழன் மீது வைக்கப் பட்டு வருகிற குற்றம் சாதிய ஏற்றதாழ்வை உருவாக்கியது. 

இந்த இருவரையுமே இந்தக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு: 1.பார்ப்பனிச் சார்பிலிருந்து வெளியே வந்து சிந்திக்க வேண்டும். 
2.மனசாட்சியோடு அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். 

இரண்டு குற்றங்களுக்குமே சொந்தக்காரர்கள் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள். இந்தக் குற்றங்களின் பின்னணியில் இருக்கிற பார்ப்பனிய சக்திகளை ஒரு இயக்கமாக அடையாளம் காட்ட முடியாது. உலகளாவி எங்கு வேண்டுமானாலும் அதிகார மட்டத்தில் சதி வலை பின்னப் பட்டிருக்கும். இவர்கள் தாம் தலைமையாக நின்று முன்னெடுப்பவர்கள் என்றும் தெளிவாக யாரையும் குற்றம் சாட்ட முடியாது. 

உணர்ச்சி வயப்பட்டு நம்மவர்களும் கூட அந்தப் பட்டியலில் செயல்பாட்டு பொறுப்பில் இடம் பெற்று விடுவார்கள். இதுதான் நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்திக் கொள்ளச் செய்யும் பார்ப்பனிய ஆதிக்க சக்திகளின் வல்லாதிக்க மூளை.

தன் கண்ணைக் குத்திக் கொண்டோர் பட்டியலிலே கருணநிதி வருவார். தமிழிசை வருவார். ஏன் பலியாகிப் போன இராஜிவ் காந்தியே பலிகடாதான். 1.இராஜிவ் கொலை 2.இராஜிவ் கொலைப் பலியை வைத்து பிரபாகரன் மீது பலி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது பார்ப்பனிய வல்லாதிக்க சக்திகள். உலகளாவிய பார்ப்பனிய வல்லாதிக்க சக்திகளின் ஒரே நோக்கம்: காலம் காலமாக தமக்கு வாழ்வு தந்து, தமக்கு அடிமையாகி விட்ட தமிழர்கள், ஒரு போதும் எழவோ, விழித்துக் கொள்ளவோ கூடாது.    

கடந்த சில நாட்களாக, தன்கண்ணை தானே குத்திக் கொண்டு, தனக்கு வலியையும். தமிழ் சமுதாயத்திற்கு இழிவையும் தேடித்தந்து, பேசு பொருளாகி இருப்பவர் தமிழ் திரைப்பட இயக்குநர் ப,ரஞ்சித் அவர்கள்.  

இராசராச சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய கருத்துகள் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பா.ரஞ்சித்துக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ப.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ப.ரஞ்சித் முன் பிணை மனு இன்று மதுரை உயர் அறங்கூற்றுமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ப.ரஞ்சித் சார்பாக பதிகை செய்யப்பட்டுள்ள மனுவில், “இராசராச சோழன் ஆட்சிகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என சமூக சீர்திருத்தவாதிகள் கூறி இருக்கின்றனர். ஏற்கெனவே பல சமூக ஆர்வலர்கள் கூறிய கருத்துக்களையே கூறினேன். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களையும் பிளவு படுத்தும் வகையில் அமையவில்லை. சமூகத்திற்கு எதிரான கருத்துகளையும் கூறவில்லை’’ என அவர் விளக்கமளித்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.