Show all

தமிழகத்தில் நீடிக்கும் மேகி நூடுல்ஸ் மீதான தடை

மேகி நூடுல்ஸ் மீதான தடையை இந்திய தர ஆணையம் நீக்கும் வரை தமிழகத்திலும் தடை நீடிக்கும் என உணவு பாதுகாப்பு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

மேகி நூடுல்சில் உணவு பொருட்களில் காரீயம் வேதி பொருட்கள் கலந்திருப்பதால் இந்தியா முழுவதும் மேகி நூடல்ஸ் பொருடகளுக்கு தடை விதித்தது.

இதையடுத்து இந்தியா முழுவதும் இருந்து மேகி நூடுல்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நூடுல்ஸ் மீதான தடையை நீக்குவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இது குறித்து தமிழக பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் நவம்பர் முதல் வாரத்தில் வரவுள்ளதாகவும், மேகி நூடுல்ஸ் மீது முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.