Show all

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வு ஜனவரி 24ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, பதிவுத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளில் உதவியாளர் பணி இடங்கள், கூட்டுறவுத் துறையில் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2ஏ தேர்வை, டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் அறிவித்தது.

இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 11 கடைசி நாள் ஆகும்.  டிசம்பர் 27-ந் தேதி தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 24ந்தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.