Show all

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் பலி.

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர்.

தீவிரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான்.

வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கே பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கினார்கள். இதனால், இருதரப்பினருக்கும் இடையிலான பயங்கர துப்பாக்கி சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல் கிடைத்து உள்ளது.

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவனிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.