Show all

மோடி விதைத்த அந்த கருப்பு நாள்! இரண்டாவது முறையாக நினைவுகூறும் நாள் இன்று

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த நாளை இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள், சிறப்பாக திருப்பூர் கோவை மக்கள், கண்ணங் கருப்பாக அஞ்சறைப் பெட்டி சேமிப்பைத் தொலைத்த தமிழகப் பெண்கள் மறக்க மாட்டார்கள் ; மறக்கவும் கூடாது. மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருக்கிற 120 கோடி மக்களையும் முட்டாளாக்கினாரே மோடி. 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தாரே அந்த நாள். கறுப்புப் பணம் ஒழியும், ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ள ரூபாய் தாள்கள் குறையும், தீவிரவாதம் அகற்றப்படும் என்று மோடி மஸ்தான் வித்தைபோல் அறிவித்தார்.

திருவாளர் ஸ்டாலின் இன்று ஒரு கூட்டத்தில் முழங்கியது போல், மோடி அகற்றுவதாக, பணமதிப்பிழப்பை முன்னெடுத்த எதுவும் இந்தியாவில் இல்லாமல் இல்லை. மோடிதான் எப்போதும் இந்தியாவில் இருப்பதேயில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,965. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.