Show all

வித்தியாசமான தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர்களான தமிழர்கள் என்ன செய்வார்கள்! தமிழகத் தொகுதிகளில் ஒன்றில் மோடி போட்டியிடுவாராம்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில கிழமைகளாக, தேசிய தலைநகர் டெல்லியில் அரசியல்  வட்டாரங்கள்:  வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது இரண்டாவது இடமாக தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம் என்ற யூகங்களைக் வெளியிட்டு  வருகின்றன. பாஜக தலைவர்கள் இதை அதிகாரபூர்வமாக  மறுத்துவிட்டாலும் மோடி தமிழக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இது ஒரு வலுவான சாத்தியம் என்றும் அது பல வழிகளில் பாரதீய ஜனதாவுக்கு  உதவ முடியும் எனவும் செய்தி கசிந்து வருகிறது.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் பாரதீய ஜனதாவுக்கு குறையும் தொகுதிகளை ஈடுகட்டவும் கட்சிக்கு உதவுவதற்கும் இந்த முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

வேட்பாளராக மோடி மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடும் தேர்தலில், பாஜக தமிழ்நாட்டில் 6 முதல் 12 இடங்களில்  வெற்றி பெற ஒரு நியாயமான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மோடி போட்டியிடுவது தேர்தலில் ஒரு  அலையை ஏற்படுத்தக்கூடும், மேலும் வட இந்தியாவில் ஏற்படும் கட்சியின் பாதிப்பிற்கு உதவும்.

தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா நிலை கொள்ள நீண்ட கால லட்சியம்  கொண்டு உள்ளது.

கடந்த காலங்களில தென்னிந்தியாவில் வலுவான  கட்சியாக இருப்பது காங்கிரசுக்கு சாதகமாவும் மத்தியில் ஆட்சி அமைக்கவும் உதவியது.

அண்மையில் நடைபெற்ற காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூட மோடிக்கு தமிழ்நாட்டின் மீது அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்தது.

மோடி தமிழக தொகுதியில் போட்டியிட விரும்பினால் பாரதீயஜனதா கொஞ்சம் வலுவாக உள்ள கோவை, திருப்பூர், கன்னியாகுமரி  இந்த தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம் என்பது கசியும் செய்தி. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு 5.5 விழுக்காடு ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க., விஜயகாந்தின் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு மக்கள்  தேசிய கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பாரதீய ஜனதா கூட்டணி மேற்கு மற்றும் வடக்கு தமிழ்நாடுகளில் அதிக தொகுதிகளை கைபற்ற வாய்ப்பு உள்ளதாக பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.