Show all

தமிழும், தமிழ் மக்களும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அதே தரத்தில்! ஆட்சியாளர்கள், அதிகாரிகள் 5க்கும் 10க்கும் அலைபாயும் அவலத்தில்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டுக்காக தமிழ் மக்கள் என்ற அடையாளத்தில், அமைதி வழியில் போராட்டம் நடத்தி, வென்றெடுத்த பாங்கில், உலகில் இப்படியொரு இனமா என்று தமிழ் மக்களைப் பார்த்து உலகம் வியக்கிறது.  விஜய் தொலைக்காட்சி இது வரை வெளிவராத சிறந்த பாடகர்களை இளவல், முதுவர் என்ற இரண்டு தளங்களில் போட்டி நடத்தி கௌரவித்து வருகிறது. அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் கனடாவில் வசித்து வருகிற ஈழத்துப் பெண்ணான சின்மயி போட்டியில் சிறப்பாக பாடி அசத்தி வருகிறார். அவரைப் பற்றிய முன்னேட்டத்தில் சின்மயியின் தாய்: தமிழே தங்கள் அடையாளம் என்று கூறி ஒட்டு மொத்த படக்குழுவினரையும் வியக்க வைத்தார். இப்படி தமிழே தங்கள் அடையாளம் என்றே உலகளாவி வசிக்கிற தமிழர்கள் பதிவு செய்கிறார்கள். 

இப்படி தமிழும் தமிழரும், தம் மீதான எத்தனையோ வணிகஞ் சார்ந்த. கலாசாரம் சார்ந்த, மதங்கள் கொள்கைகள் சார்ந்த படையெடுப்பு மற்றும் ஆதிக்கங்களுக்குப் பின்னாலும் ஐயாயிரம் ஆண்டுகளாக அதே தரத்தில்- இருக்கிறது தமிழ்; இருந்து வருகின்றனர் தமிழர்கள்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ காசுக்கு சோரம் போகிறவர்களாக நடைபோட்டு வருகிறார்கள். ஆளும் அரசு ஸ்டெர்லைட் என்கிற ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக பதின்மூன்று தமிழ்ப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறது.  

இன்றைக்கு தமிழக அதிகாரிகளின் இலஞ்சக் கரங்கள் அமெரிக்க வரையில் நீண்டு அசிங்கப் பட்டு வருகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் என்ற, கணினி மென்பொருள் நிறுவனம், நம் நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்காக, சென்னையில், 27 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம் கட்ட, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் நடந்தன. இந்த அலுவலக வளாகம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்க, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர், 14 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்தத் தொகையை, அந்த வளாக கட்டுமான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அளிக்கும் படி, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் கார்டன் கோபர்ன், தலைமை சட்ட அதிகாரி, ஸ்டீபன் ஸ்குவார்ட்ஸ் கூற, அந்தத் தொகையை, கட்டுமான பணிகள் தொடர்பான கூடுதல் செலவாக, கணக்கு காட்டி செலுத்தி உள்ளனர். இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும், இதே பாணியில், 11.41 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர். 

இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு லஞ்ச நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், காக்னிசென்ட் மீது, அந்த நாட்டின் பங்குச் சந்தை நடவடிக்கை எடுத்துள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.