Show all

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயார்

2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டிற்கான வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர், பத்திரிகையாளர்ளை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில், தனித்துப்போட்டியிட உள்ளதாக ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டணிக்கு தயார் என்று அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.