சௌதி அரேவியாவில் உள்ள புனித நகரமான மெக்காவின் பெரிய மசூதியில் ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு நிவாரண உதவியை சௌதி அரசு இன்று அறிவித்துள்ளது. விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட உயர்மட்டக் குழுவின் விசாரணை அறிக்கை சௌதி மன்னர் சல்மானிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.75 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், விபத்தில் காயமடைந்து நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.88 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.