Show all

தமிழகத் தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது.

நேற்று(ஏப்.29) மாலை 3 மணியுடன் நிறைவடைந்த வேட்புமனு தாக்கலில் சுமார் 6,700-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று(ஏப்.30) காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். இதற்கென இரண்டு தொகுதிகளுக்கு ஒரு வெளி மாநிலப் பார்வையாளர் வீதம் 122 பேர் தமிழகம் வந்துள்ளனர். மனுக்களைத் திரும்பப் பெற மே 2ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.