Show all

மாநிலக் கல்லூரி மாணவர்கள், மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம்

இன்று காலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி, மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.  இதனால் 1 மணி நேரம் வரை அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த மெரினா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தைக் கலைக்க மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது மாணவ, மாணவிகள் அங்கு இருந்து சிதறி அடித்து ஓடினர்.

இந்நிலையில், அங்கு இருந்த சில மாணவர்களைப் போலீஸார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.