தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்த
வேட்பாளர்களிலேயே மிகப் பெரிய பணக்கார வேட்பாளராக அறியப்படுபவர் காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த ஹெச். வசந்தகுமார் என்று தெரிய வந்துள்ளது. வசந்த் அண்ட் கோ நிறுவன உரிமையாளர் இவர் என்பது அனைவரும் நன்கறிந்ததே. நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார்
வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.
வசந்தகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.332 கோடி
மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் மற்றும் ரொக்கம், வங்கி இருப்பு, தங்க நகைகள் உள்ளதாகவும்,
வங்கிகளில் பெற்ற கடன் உள்பட ரூ.123 கோடி கடன் இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள
வேட்பாளர்களில் 25 சதவீதத்தினர் கோடீஸ்வரர்கள்தான் என்று கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.