Show all

சரத்குமாரின் காரிலிருந்து கணக்கில் வராத ரூ.9 லட்சம் பறிமுதல்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் காரிலிருந்து தேர்தல் அதிகாரிகள், கணக்கில் வராத ரூ.9 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் விதிமுறைகளை மீறி பணத்துடன் தன் காரில் பயணம் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்செந்தூர் அருகே நல்லூர்விளக்குப் பகுதியில் சிறப்பு வட்டஆட்சியர் வல்லிக்கண்ணு தலைமையிலான பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சரத்குமார் காரில் இருந்த ரூ.9 லட்சம் சிக்கியது.

 

இந்தத் தொகை கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். .

 

கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் இதுவரை ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் பிரபல அரசியல்வாதி ஒருவர் கணக்கில் வராத தொகையை எடுத்து சென்று சிக்கியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.