Show all

இரஜினி குறித்து உச்சபட்ச பகடியாடல்! துடுக்கும் மிடுக்குமான அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத்

இன்றைக்கு இரஜினி,  அன்றைக்கு சோ பின்வாங்கியதை அறியாதவராக, அன்று சோ தன் துக்ளக் இதழில் வெளியிட்ட இராமர் சீதை அவமதிப்புச் செய்தியை தூக்கிப்பிடித்து பெரியாரைச் சீண்டியது- ஒட்டு மொத்த தமிழகத்தையும் இரஜினிக்கு எதிராகப்; பேச வைத்திருக்கிறது.

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: துக்ளக் ஐம்பததாவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் சோவை பாராட்டுகிறேன் என்று- அன்றே மன்னிப்பு கோரப்பட்ட, துக்ளக்கில் வந்த அந்தச் செய்தியை முன்னெடுத்து- மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்திய கலாச்சாரமான இராம்லீலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை எதிர்ப்பு பேரணியில் நடந்ததாக- இராமர், சீதை அவமதிப்பு என்று பொய் செய்தியை வெளியிட்டு, அன்றைக்கே அறங்கூற்று மன்றத்தில் தன் பொய்செய்திக்கு மன்னிப்பு கேட்டு, ஒதுங்கிக் கொண்டார் சோ. 

ஆனால் இன்றைக்கு இரஜினி,  அன்றைக்கு சோ பின்வாங்கியதை அறியாதவராக, அன்று சோ தன் துக்ளக் இதழில் வெளியிட்ட இராமர் சீதை அவமதிப்புச் செய்தியை தூக்கிப்பிடித்து பெரியாரைச் சீண்டியிருக்கிறார்.

இந்த நிலையில் ரஜினியை திராவிடர் கட்சிகள் கூட விமர்சிக்காத வகையில் மிகவும் மோசமாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தனது கீச்சுப்; பக்கத்தில், “அது சரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவநடுகல் எதுன்னு தெரியவா போகுது” என்று இரஜினியின் அறியாமையயை பகடியாடி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.