Show all

திரைப்படத் தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சென்னை கனமழையால் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்தது.

தமிழத்; திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் ஆகியோர் மூலம் நிவாரணப்பொருள்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர்களுக்கு நிவாரணப் பொருள்கள் நேற்று வழங்கப்பட்டன.

இந்த விழாவில் இளையராஜா பேசும்போது,

இங்கே கொடுப்பதும் வாங்குவதும் சினிமா கலைஞர்கள்தான். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் தவறு செய்துள்ளோம். சமீபத்தில் பெய்த மழை, இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டுமே சொல்லமுடியும். இந்த மழை நம்மைப் பாடாய்ப் படுத்திவிட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பணக்காரருக்கு பிரட் கொடுத்தால், அவர் அடுத்தவருக்கும் கொடுங்கள் என்று சொல்கிறார். இது நம் கண் முன் நடக்கும் நிகழ்வு. ஒவ்வொருவருக்கும் கொடுத்துப் பழகுங்கள். மழை, மனிதநேயத்தை வளர்த்துள்ளது என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.