சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடலுக்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து கண்டங்கள் எழுந்து வருகிறது. கோவை, சென்னை, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து, தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்தி பேசியபோது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம், தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது. அவர் தமிழன் என்பதாலா? ஒரு வேளை தமிழக காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் ஜாமீனில் வெளியே வரும் பொழுது தமிழர் முன்னேற்றப்படை சார்பாக எமது தலைமையில் அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன். இன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா? ஈழத்தில் இல்லையா? ஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையைக் கேளுங்கள். கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளைப் படியுங்கள். பெண்களின் கண்ணியத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.