07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.இராமதாஸ் அவர்கள் இன்று காலை தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு: 'இந்த அகிலத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஏற்கனவே நம்மிடம் வந்து விட்டன. ஆனால், நாம் தான் நமது கைகளால் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகம் இருளில் மூழ்கிவிட்டதாக கதறிக் கொண்டிருக்கிறோம்!' - சுவாமி விவேகானந்தர் திருக்குறளுக்கு இதுவரை ஆயிரத்திற்கு மேலானவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஏறத்தாழ அனைத்தும் ஒரு மாதிரியாகவே இருக்கும். காலையிலிருந்து இந்தப் பதிவுக்கு ஆளாளுக்கு ஓர் உரையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.இராமதாஸ் அவர்களின் இந்தப் பதிவுக்கு நாம் யோசிக்கிற தெளிவுரை இதுதான்: வரும் நாடளுமன்றத் தேர்தலில், பாமக, அதிமுக, பாஜக கூட்டணி அமையப் போகிறது. சரியா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.