Show all

உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் பேசாத இராமதாஸ்! அதிமுக வேட்பாளர்களை வைப்புத்தொகை இழக்கச் செய்ய வேண்டும்

அதிர்ச்சியில் அதிமுகவினர் ஆடிப்போனார்கள். காரணம்- காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை வைப்புத்தொகை இழக்க செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதுதான்.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஞ்சிபுரத்தில் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தையும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்தும் திருக்கழுக்குன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டார்.
 ஓர் எல்லையில்: 'அதனால், தேர்தலில் சிறப்பாக வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை வைப்புத்தொகை இழக்கச் செய்ய வேண்டும்' எனக் கூறினார் ராமதாஸ்.
இதைக் கேட்டதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். சில விநாடிகளில் சுதாரித்துகொண்ட ராமதாஸ், திமுக வேட்பாளர்களை வைப்புத்தொகை இழக்கச் செய்ய வேண்டும்' என மாற்றி கூறினார்.
உள்ளத்தில் இருப்பதை உதட்டில் தெரிவிக்கிற நேர்மையாளர் இராமதாஸ்! என்கிற நையாண்டி இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,123.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.