Show all

மழையோ மழை! வறண்டிருந்த ஏரி குளங்கள் நிரம்பின- தெருக்கள் எல்லாம் குட்டைகளாகின- நீர்க்காடானது சென்னை

வெள்ளக்காடானது சென்னை- இன்ப அவதியில் மக்கள்! கடந்த ஓர் கிழமையாக இரவில் மட்டும் மழை. கடந்த இரண்டு நாட்களாக பகலிலும் விட்டு விட்டு மழை. கடந்த மூன்று மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை. 

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த ஓர் கிழமையாக இரவில் மட்டும் மழை. கடந்த இரண்டு நாட்களாக பகலிலும் விட்டு விட்டு மழை. கடந்த மூன்று மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை. வெள்ளக்காடானது சென்னை இன்ப அவதியில் மக்கள் 

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து அங்கு மழை பரவாலாக பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் கழிமுக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,353.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.