Show all

தனது மகன் கைதால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி

தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயமாக இருந்திருக்குமென மஹிந்த ராஜபக்ஷ வெந்து வெதும்பி தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக வெலிகடை சிறைச்சாலைக்குச் சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.

 

தனது மகன் யோஷித எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் நாட்களில் முதுநிலைப்பட்டத்திற்கான தேர்வுக்கு தயாராகவுள்ள  நிலையில் அவரது மனநிலை எப்படி இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி எழுப்பினார்.

கார்டன் ஸ்போட்ஸ் நெற்வெர்க் நிறுவனம் தொடர்பிலான வழக்கில் டாக்டர் ஒருவர் பங்குதாரராக இருப்பதாகவும், அரசாங்கம் அவரை அச்சுறுத்தி யோஷிதவின் பெயரை உள்வாங்கியிருப்பதாகவும் மகிந்த சுட்டிக்காட்டினார்.

 

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் சுகயீனமுற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.