சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டிருந்தாலும்,
ஒரு பக்கம், இதில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பதாக பல வழக்கறிஞர்கள் கருத்து
தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம்
ரயில் நிலையத்தில் சுவாதி யாரோ ஒரு வாலிபர் கன்னத்தில் அறைந்ததாகவும், பின் சுவாதி
ரெயிலில் ஏறி சென்றதை தான் பார்த்ததாக, செங்கல்பட்டில் ஒரு கல்லூரியில் பணிபுரியும்
பேராசிரியர் தமிழரசன் என்பவர் நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். அந்த வாலிபர் பெங்களூர் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கும்
சுவாதிக்கும் என்ன பிரச்சனை என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது. அதேபோல், சுவாதியின்
நெருங்கிய தோழரான முகம்மது பிலால் மாலிக்கிற்கும் தொடர்பிருக்கலாம் என பேசப்படுகிறது. சுவாதி கொலை செய்யப்பட்டவுடன், அவர் பிலால் மாலிக் என்ற வாலிபரால்
வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுவாதியின்
நெருங்கிய நண்பராகிய அவரிடம் காவல்துறையினர் இதுவரை பெரிதாக விசாரணை ஏதும் நடத்தவில்லை
என்று குற்றச்சாட்டும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சுவாதி வழக்கில் காவல்துறையினர் விசாரணை சூடு
பிடித்துள்ளது. தற்போது ராம்குமாரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை
செய்து வருகிறார்கள். அவரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அவர்
மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார். இந்நிலையில், பிலால் மாலிக் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தலையில் தலைக்கவசத்துடன்
காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.