Show all

இருகிழமைகளில் துப்பு துலக்கியது காவல்துறை! குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் வலது கை கண்டெடுக்கப்பட்ட கொலை குறித்து

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு கிழமைகளுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. பெண்ணின் கையில் குத்தியிருந்த பச்சையை வைத்து, அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர் காவல்துறையினர். 

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

இவரது கணவர் பாலகிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்தப் படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில் கணவன் மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு அறங்கூற்றுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தமது மனைவி வேறாருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த பாலகிருஷ்ணன், சந்தியாவை கொலை செய்து விட்டு, அவரின் உடலைதுண்டு துண்டாக வெட்டி பெருங்குடியில் வீசி எறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, இயக்குனர் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.