20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெண்கள் விடுதியில், கழிப்பறை, மற்றும் குளியலறைகளில் படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த செய்தி- கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்: பெண்கள் படிப்புக்காகவோ, வேலைக்காகவே, புது இடத்தில் தங்கியிருக்கும் அறையில் எப்போதுமே கவனத்துடன் இருப்பது நல்லது. அறையில் எங்காவது ஊசிமுனை அளவே உள்ள படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று ஆராய்வது நல்லது. படுக்கைஇருக்கை, கண்ணாடிக்குப் பின்புறம், துவாரங்கள் இருந்தால் அவற்றை சோதித்துப்பாருங்கள். அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு, செல்பேசியினால் சந்தேகத்துக்கிடமான இடங்களைப் புகைப்படம் எடுங்கள். அதில் சிவப்பு நிறம் தென்பட்டால், படபிடிப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது என விழிப்படைந்து விட வேண்டும். அறைக்குள் வைத்திருக்கும் பூஞ்செடிகள், புகைப்படங்களுக்குப் பின்புறம்கூட படப்பிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,993.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.