Show all

கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறையினர்! பெண் துப்புரவு பணியாளருக்கு பிறந்த நாள்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழவந்தாங்கல் காவல் நிலையத்தை துப்புரவு செய்பவர் அனுசுயா அகவை 67. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை அறிந்து காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை அறிந்த ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வாங்கிவரச் சொல்லி காவல் நிலையத்திலேயே அனைத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் முன்னிலையில் அனுசுயாவின் பிறந்த நாளை கேக்  வெட்டி கொண்டாடினர். புடவையும் பரிசாக வழங்கினர். பலர் பணப்பரிசு வழங்கினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது: நங்கநல்லூர் எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அனுசுயா காவல் நிலையத்தில் துப்புரவு பணிகளை கவனித்து வருகிறார். இவருக்கு கணவர் கிடையாது. ஒரு மகன். குடிபழக்கத்தால் தாயை கவனிக்கவில்லை. காலை, மாலை இருவேளை உணவு காவல் நிலையம் சார்பில் அவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் மாதச் செலவுக்கு பணமும் கொடுக்கிறோம். நல்ல முறையில் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பார். ஆய்வாளர் முதல் கடை நிலை காவலர் வரை அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் பேசுவார். குடும்பத்தில் ஒருவர் போல எங்களிடம் உரிமையுடன் பழகுவார். இதனால் அவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,985.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.