Show all

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு 1195 மதிப்பெண் எடுத்து இரண்டு பேர் முதலிடம்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு 1195 மதிப்பெண் எடுத்து இரண்டு பேர் முதலிடம்

செவ்வாய், 17 மே 2016 மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும்.

1193 மதிப்பெண் பெற்று மாணவி வினுபிரீத்தா மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.

 

தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டம் 94.86விழுக்காடு தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.