நாட்டில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார். அப்போது மன்மோகன்சிங், நாட்டில் சிந்தனை,சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது.எழுத்தாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது. நாட்டில் அமைதி இல்லையென்றால், சுதந்திரம் இருக்க வாய்ப்பில்லை,அதேபோல் சுதந்திரம் இல்லாமல் அமைதி இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.