தமிழகச் சட்டமன்ற
தேர்தலில் மாலை 3மணி நிலவரப்படி 63.7 விழுக்காடு வாக்குப்பதிவாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவரப்படி 61.51 விழுக்காடு வாக்குகளும்
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 54.74 விழுக்காடு வாக்குகளும்
திருவாரூரில் 62.73 விழுக்காடு வாக்குகளும் வந்தவாசியில் 65 விழுக்காடு வாக்குகளும் உளுந்தூர்பேட்டையில் 68 விழுக்காடு வாக்குகளும் செஞ்சி 70 விழுக்காடு வாக்குகளும் வேதாரண்யத்தில் 59 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஜெயங்கொண்டத்தில் 68 விழுக்காடு வாக்குகளும் அரியலூரில் 72 விழுக்காடு வாக்குகளும்; பதிவாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்பகல் 59.57 விழுக்காடு வாக்குகளும்
பதிவாகியுள்ளன. சங்கரன்கோவில் தனித் தொகுதியில் 61.3 விழுக்காடு வாசுதேவநல்லூர்
தனித்தொகுதியில் 59 விழுக்காடு கடையநல்லூர் தொகுதியில் 63.06 விழுக்காடு தென்காசி தொகுதியில்
64 .27 விழுக்காடு ஆலங்குளம் தொகுதியில் ஆலங்குளம் 58.96 விழுக்காடு திருநெல்வேலி தொகுதியில்
55 விழுக்காடு அம்பாசமுத்திரம் தொகுதியில் 61.2 விழுக்காடு பாளையங்கோட்டை தொகுதியில்
56.2 விழுக்காடு நாங்குநேரி தொகுதியில் 57.2 விழுக்காடு இராதாபுரம் தொகுதியில் 59.5 விழுக்காடு பதிவாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 64.48
விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 66.55 விழுக்காடு வாக்குகளும்,
கேரளாவில் 51.89 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.