Show all

பாமக உடைகிறதா? உடைக்கப் படுகிறதா

வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் காசிபாண்டியன் சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சியை அடுத்த மாயம்பாறை என்ற அருணாசலபுரத்தைச் சேர்ந்தவர். இவர் சங்கரன்கோவில் ஒன்றிய பாமக செயலாளராக உள்ளார்.

இவர் தலைமையில், கிளை செயலாளர்கள் மற்றும் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் காளியப்பன், துணைச் செயலாளர் வைரபாண்டி, ராயகிரி கிளைச் செயலாளர் அரக்கன், இன்னெரு மாடசாமி உட்பட 20 பேர் மாநில திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

ஏற்கனவே நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளர் திருப்பதி, ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.