Show all

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள்; கைது.

ஐக்கிய அரபு எமிரெட்சில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள் அபுதாபி மற்றும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரெட்சில் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மற்றவர்களையும் பயங்கரவாத இயக்கத்தில் சேர செய்யும் முயற்சியையும் செய்து உள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அபுதாபி மற்றும் துபாயில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். இதேபோன்று பயங்கரவாத இயக்கத்தில் இணையவேண்டும் என்றுதிட்டமிட்ட பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

11 இந்தியர்களிடமும் முழுமையான விசாரணை நடத்திய பின்னரே, நாடு கடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 11 இந்தியர்கள் தொடர்பான தகவல்களை இந்திய அரசுடன் எமிரெட்ஸ் அரசு பகிர்ந்துக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரெட்சில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செய்திவெளியிட்ட இந்தியர்கள் 2 பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.