தற்போதைய சூழ்நிலையில் தமிழகச் சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளதாக அக்கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் இளங்கோவன் சந்தித்து பேசினார். 30நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். தற்போதைய சூழ்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளதாக இளங்கோவன் தெரிவித்தார். கூட்டணி அவசியம் என்றால் அது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும் என அவர் கூறினார். இளங்கோவனுடன் கட்சி நிர்வாகிகள் இருவர் உடன் இருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.