Show all

காட்பாடியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, மது பாட்டிலை ஸ்டாலினிடம் காட்டி

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து மது ஒழிப்புக்காகத்தான் இருக்கும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் நேற்று, மேல் விஷாரம், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்கு வந்தார் ஸ்டாலின்.

அப்போது, காட்பாடியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, மது பாட்டிலை ஸ்டாலினிடம் காட்டிப் பேசியதாவது: இந்த பாட்டில்தான் எங்கும், எப்போதும் கிடைக்கிறது. இதை குடித்து, என் தந்தை இறந்தார்; இன்றைக்கும் நிறைய பேர் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வருங்காலம் கேள்விக்குறியாகி விடும், என்றார்.

மாணவியிடம் பேசிய ஸ்டாலின்,

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து மது ஒழிப்புக்காகத்தான் இருக்கும். அதை, ஏற்கனவே கருணாநிதி அறிவித்து விட்டார் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.