Show all

அடுத்த வெள்ளிக் கிழமை இந்தியாவுக்கு வருகிறார் கோத்தபய ராஜபக்சே! இலங்கையின் புதிய அதிபர்: வெளியுறவு துறை

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே அடுத்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா வருகை தரவுள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு, இலங்கையின் ஆதரவு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து இந்தியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அப்போது, இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அடுத்த வெள்ளிக்கிழமையன்று  இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,341.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.