Show all

வரலாற்றில் புதிய முயற்சி! நடிகர் விஜய்யின் மக்கள் சேவையில் புதிய வழித்தடம்

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் விஜய், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், உழவர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் உழவர்களின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ( மின்னேற்றக் கைவிளக்கு, தென்னை, பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள செய்ததும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.