Show all

பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம்

தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது.

அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் இடம்பெற்றுள்ளன.

ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, லண்டனில் உள்ள தன்னார்வ நிறுவனமான வாட்டர் எய்டு,

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிடைக்கும் தூய்மையான குடிநீர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

 

அந்த அறிக்கையில்,

உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் 5விழுக்காடு பேருக்கு, அதாவது 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. தண்ணீர் பிரச்னையால் உண்டாகக்கூடிய வயிற்றுப்போக்கின் காரணமாக, ஆண்டுதோறும் 1.4 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.

 

இந்தியாவில் பாதுகாப்பட்ட குடிநீரை குடிக்கும் மக்கள், தூய்மையான குடிநீரை வியாபாரியிடமிருந்து பெற, ஒரு லிட்டர் குடிநீருக்கு 1 ரூபாய் செலவிட வேண்டியது வரும். தண்ணீர் பற்றாக்குறையை பொருத்து, சில நேரங்களில் இத்தொகை இரட்டிப்பாகும். நீர் வளங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் தான் இந்திய மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்பட்டியலில் முதல்3ல், இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் உள்ளன. பாகிஸ்தான் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.