Show all

பீகாரில் மாநிலத்தின் உள்துறை செயலாளர் அதிரடியாக இடமாற்றம் .

பீகாரில்  தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்திற்குள் மாநிலத்தின் உள்துறை செயலாளரை அதிரடியாக இட மாற்றம் செய்ய தேர்தல்  ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பீகாரில் அடுத்த மாத அக்டோபர் 12ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் 5  கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த கையோடு மாநில உள்துறை செயலாளர் அமிர்சுப்கானி  உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடமாற்ற ஆணைகளையும் வழங்கி தேர்தல் ஆணையம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.