Show all

மெரீனாகடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்,

சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வரும் நவம்பர் 16 ஆம் தேதிக்குள் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை  அகற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிவாஜி சிலையை அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக நெடுஞ்சாலை துறைக்கு  உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.