Show all

சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு கடைகள் ஒதுக்கீடு குறித்து பட்டாசு விற்னையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சீனப் பட்டாசுகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தனிப்படையில் இடம்பெறுவோர் விவரத்தை தமிழக அரசு அக்டோபர் 26ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.