வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு
முத்தம் கொடுத்த ஒரு வாலிபர் விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் வசிப்பவர்
அசோக்குமார். அவரின் மகள் அஸ்வினி சென்னையில் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணிபுரிந்து
வருகிறார். அஸ்வினி விடுமுறை காரணமாக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அதே பகுதியில், மாரியம்மன் கோவில் தெருவில்
வசிப்பவர் குப்புசாமி. அவரின் மகன் லோகநாதன்.
பொறியியல் பட்டதாரியான அவர், ஒரு தனியார் தூதஞ்சல் நிறுவனத்தில் வேலை செய்து
வருகிறார். லோகநாதன், அஸ்வினியை ஒரு தலையாக காதலித்ததாக
தெரிகிறது. நேற்று காலை 11 மணியளவில், அஸ்வினி தன்னுடைய வீட்டு வாசலில் தனியாக நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த லோகநாதன், திடீரென அஸ்வினிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்வினி கத்தி கூச்சல்
போட்டார். இதனால் லோகநாதன் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதுபற்றி, அஸ்வினியின்
தந்தை அசோக்குமார், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் லோகநாதனை கைது
செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.