Show all

கருணாநிதிக்கு ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருது

 

     திமுக தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நிறுவனம், ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

     அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ‘ரோச்சஸ்டன்’ நிறுவனம் திமுக தலைவர் கருணாநிதிக்கு

‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’

என்ற விருதினை வழங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் காஜா மொய்தீன், நிர்வாக இயக்குநர் ஹாசிம் ஆகியோர் நேற்று சென்னையில் வழங்கினர்.

 

ஆண்டுதோறும் உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்கள், மக்கள் தலைவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது நடப்பாண்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் தலைவர், அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர், மொழி அறிஞர் என பன்முக ஆற்றலோடு செயல்பட்டு வரும் கருணாநிதிக்கு இந்த விருதினை வழங்கு வதில் பெருமை கொள்வதாக

ரோச்சஸ்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.