Show all

சிலையில் வடிக்கப்பட்டிருந்தது! கலைஞர், அவர் வாழுங்காலம் முழுவதும் வலியுறுத்தி வந்த ஐந்து கட்டளைகள்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருணாநிதியின் சிலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தியால் திறக்கப்பட்டது. 

புதிதாக நிறுவப்பட்ட அவரது சிலையில் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன. அவை: 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம் 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் 3. ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் 5. மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி ஆகிய 5 கட்டளைகள் சிலையில் இடம்பெற்றுள்ளன.

கலைஞர், அவர் வாழுங்காலம் முழுவதும் மாநில அரசுக்கு இவை தேவை என்று, வலியுறுத்தி வந்த கொள்கைகள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.