Show all

திருமண விழாவில் உணவுண்ட அனைவரில் 3பேர் உயிரிழப்பு! மணமகன், மணமகள் உள்ளிட்ட 253 பேர் மருத்துவமனையில் அனுமதி

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் அருகே நடைபெற்ற திருமண விழாவில் உணவுண்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் அருகே பஸ்தி என்ற கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண விழாவில் உணவுண்ட அனைவருக்கும் திடீரென ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

மணப்பெண், மணமகன் உட்பட அனைவரும் மாவட்டத்தில் உள்ள வௌ;வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத்தை சுற்றிலுள்ள பல்வேறு மருத்துவமனையில் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல், ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தது, கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணத்தில் சமைக்கப்பட்ட உணவில் ஏதாவது நச்சுப் பொருள் கலந்திருக்கக் கூடுமா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.