நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தேவி பல ஆண்டுகளாக
பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். இவர் தாய்மதி என்ற இல்லம் ஒன்றை தொடங்கி வீடில்லாத
60-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து
ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் இவர், தமிழ்நாட்டிலேயே
ஒரு மிகப்பெரிய தலைவர் ஜெயலலிதா நான் அவரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக ஆர்.கே நகர்
தொகுதி மக்களுக்காக நிற்கிறேன் என கூறியுள்ளார். மக்களுக்கு
அரசியல் மூலம் இன்னும் வலுவாக சேவை செய்ய முடியும் என்பதால் தான் அரசியலை தேர்ந்தெடுத்ததாக
கூறும் தேவி, ஏழைகளின் வாழ்க்கையில் வளர்ச்சியைக் கொண்டுவர பாடுபடப் போகிறேன். மேலும்
ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு துய்மையான குடி தண்ணீர் கொடுக்கவும், நல்ல வேலைவாய்ப்பு
கிடைக்க செய்யவும் பாடுபடுவேன் என கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.