Show all

கச்சத்தீவில் கட்டப்படும் தேவாலயத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய் கிழமை) இலங்கை அரசு கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் ஒப்புதல் மற்றும் பங்களிப்பு இல்லாமல் புனித அந்தோனியார் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

திங்களன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஏழு தமிழக மீனவர்களை மீட்கக் கோரி எழுதியுள்ள கடிதத்தில், தேவாலயத்தை கட்டும் இந்த முயற்சியானது கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்து வரும் தமிழக மீனவர்களின் கைதுகளோடு தொடர்புடையது என்றும் குறிபிட்டுள்ளார்.

மீன்பிடி தடை காலம் முடிந்தவுடன், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்களை, அவர்களது விசை படகுகளுடன், இலங்கை கடற்படை செவ்வாய் கிழமை அதிகாலையில் கைது செய்தது.

கைதான மீனவர்கள் தலைமன்னாருக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் தொடர் நிகழ்வுகள் அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது என்று குறிபிட்டுள்ளார்.

சர்வதேச கடல் எல்லை குறித்த வழக்கு இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.