Show all

டாஸ்மாக் கடையை மூடமறுத்த ஆட்சியர் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கடையை மூட மறுத்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஊராட்சித் தலைவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடையால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு இல்லை எனக்கூறி கடையை மூட ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார். ஆட்சியர் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.