Show all

மழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது  டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்கள் குவிந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, ஆட்டம் 19  ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 137 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைத்தொடர்ந்தும் மழை பெய்து வந்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆஸ்திரேலிய அணி  1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால், இந்தியா அடுத்த போட்டியில் கண்டிப்பாக வென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.