Show all

போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக இயந்திரமனிதன் அறிமுகம்!

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக இயந்திரமனிதன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் இந்த இயந்திரமனிதனை ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சைகைகளைக் காண்பிக்கவும் இயந்திரமனிதனுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த இயந்திரமனிதன் முதன்மைச் செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த இயந்திரமனிதனை வடிவமைத்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.