தமிழகம்-புதுச்சேரியில் உள்ள வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் வருமான வரி செலுத்துவதற்கு, சனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடுவண் நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம்-புதுச்சேரியில் உள்ள வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள், ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதிக்குள் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது வழக்கம். ஆனால் மழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த (டிசம்பர்) மாதம் முன்கூட்டியே வருமான வரி செலுத்துபவர்களுக்கு, ஜனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. செலுத்தப்படும் இந்த வரித்தொகை வழக்கமான காலத்திலேயே, அதாவது 15-ந்தேதி கட்டியவாறே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.