Show all

20 தொகுதி இடைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கேட்டுக்கொண்டால், நடவடிக்கை! தலைமை தேர்தல் ஆணையர்; கஜாபுயல் பாதிப்பு எதிரொலி

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி சட்டமன்;ற உறுப்பினர் மறைவைத் தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.

இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்;ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக இருக்கிறது.

இந்த 2 தொகுதிகளுக்கும் நடக்க இருந்த இடைத்தேர்தல், பருவமழையைதான் காரணம் காட்டி ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே தகுதி நீக்க வழக்கில் அதிமுக சட்டமன்;ற உறுப்பினர் 18 பேரை பேரவைத்;தலைவர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கடந்த மாதம் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, இந்த தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கு சித்திரை,தமிழ்;தொடர்ஆண்டு-5121க்குள் (ஏப்ரல்.2019) தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் கட்சியாக உள்ள அதிமுக ஆட்சியை தக்கவைக்க குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை காணப்படுகிறது. இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்க ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட முதன்மைக் கட்சிகள் அனைத்துமே ஆவலுடன் காத்திருக்கின்றன.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு கிழமைக்கு முன்பு தமிழகத்தின் 12 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்துபோனது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அளித்த பேட்டியில்:

எப்போது தேர்தல் நாள் குறித்து ஆலோசித்தாலும், திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டே முடிவு செய்வோம். புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பின்னரே இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும்.

தேர்தல் ஆணையம் எப்போதுமே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்காது. களத்தில் இருந்து தான் தேர்தல் ஆணையம் தகவல்களை கோரும். ஏனென்றால், களத்தில் இருப்பவர்கள் ஆளுகிறவர்கள் தாம்.

20 தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு அறிக்கை அனுப்பினால் அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். தமிழக அரசு தானாக அறிக்கை அனுப்பாவிட்டால், தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,984.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.