05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா டுடே நாளிதழ் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், என்னை ஹிந்துக்களுக்கு எதிரானவன் என கூறுகின்றனர். ஆனால், நான் மோடி, அமித்ஷா, அனந்த்குமார் ஹெக்டே ஆகியோருக்கு எதிரானவன். அவர்கள் ஹிந்துக்கள் அல்ல. என்று கூறினார். நடுவண் அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, ‘அரசியலமைப்பு சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்க வேண்டும்’, என்று கடந்த மாதம் கூறியிருந்தார். அதன்பின் எழுந்த சர்ச்சையையடுத்து, அக்கருத்துக்கு மன்னிப்பு கோரினார். மேலும், பத்மாவதி திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், அந்த மாநில அரசுகள் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்தார். மேலும், வலது சாரிய அமைப்புகள் மற்றும் அமைச்சர்களால் முன்வைக்கப்படும் சர்ச்சை கருத்துகளுக்கு எதிராக தலைமை அமைச்சர் மோடி தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,671
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.