Show all

சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை

இஸ்ரேலின் துணைநிலை தூதரக அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் நடந்த விருந்தொன்றின் போது சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை படம்பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

தூதரக அதிகாரியின் செயல் வருந்தத் தக்கது என்றும் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய தூதரகம் கூறியுள்ளது.

தேசியக் கொடியை துஷ்பிரயோகம் செய்த குற்றம் தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த செயலை ஒரு மோசமான குற்றம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வர்ணித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.